+

இந்தியா-அமெரிக்கா இடையே புதிய கடலடி கேபிள் இணைப்புகள்- சுந்தர் பிச்சை அறிவிப்பு

கூகுள் மற்றும் ஆல்ஃபபெட்.இங்க் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாட்டில் பங்கேற்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் புதிய கடலடிக் கேபிள் (subsea cable) பாதைகள் அமைக்கப்படும் என்றும், திறன் ம

கூகுள் மற்றும் ஆல்ஃபபெட்.இங்க் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாட்டில் பங்கேற்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் புதிய கடலடிக் கேபிள் (subsea cable) பாதைகள் அமைக்கப்படும் என்றும், திறன் மேம்பாட்டு திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும், அரசுடன் செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டாண்மை வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணம் நகரில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 15 பில்லியன் டாலர் மதிப்பிலான AI மையத்தில், ஒரு கிகாவாட் அளவிலான கணினி வசதியுடன் சர்வதேச கடலடிக் கேபிள் நுழைவாயில் அமைக்கப்படும் என்றார்.

“இந்தியா–அமெரிக்கா கனெக்ட்’ என்ற புதிய முயற்சியின் மூலம், அமெரிக்கா–இந்தியா மற்றும் தெற்கு அரைக்கோளத்தின் பல பகுதிகளுக்கு இடையில் AI இணைப்பை அதிகரிக்கும் வகையில் புதிய கடலடிக் கேபிள் வழித்தடங்கள் அமைக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

திறன் மேம்பாட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக, 2 கோடி அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், 1.1 கோடி மாணவர்களுக்கு ஆதரவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. “Google AI Professional Certificate Programme” என்ற புதிய சான்றிதழ் திட்டம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடங்கப்படும்; பின்னர் இந்திய மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார். இதற்காக Wadhwani AI அமைப்புடன் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், இந்திய சிவில் சர்வீஸுக்கு ஆதரவாக Karma Yogi Bharat அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும். 800 மாவட்டங்களில் 18 இந்திய மொழிகளில் 2 கோடி அரசு ஊழியர்களுக்கு சேவை வழங்கும் தளத்துக்கு Google Cloud பாதுகாப்பான உள்கட்டமைப்பை வழங்கும் என்று கூறினார்.

அத்துடன், உலகளாவிய ஆராய்ச்சியாளர்களை ஆதரிக்கும் வகையில் “Google.org AI for Science Impact Challenge” என்ற பெயரில் 30 மில்லியன் டாலர் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. மேலும், Atal Tinkering Labs அமைப்புடன் இணைந்து, 10,000க்கும் மேற்பட்ட இந்தியப் பள்ளிகளிலும் 1.1 கோடி மாணவர்களுக்கும் ரோபோடிக்ஸ் மற்றும் குறியிடல் (coding) கற்றலுக்காக ஜெனரேட்டிவ் AI உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் பயனர், உருவாக்குநர் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர் என மூன்றிலும் முன்னிலை வகிக்கும் திறன் கொண்ட நாடாக உருவெடுக்கிறது எனவும்,

“AI என்பது நம் வாழ்நாளில் மிகப்பெரிய தள மாற்றமாகும்; உலகளாவிய அளவில் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி கொண்டது,” எனவும் சுந்தர் பிச்சை வலியுறுத்தினார்.
facebook twitter