தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த Stan Ventures பிரதீப் குமார் ராஜரத்தினம்!

03:39 PM Aug 11, 2026 | muthu kumar

Stan Ventures நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரதீப் குமார் ராஜரத்தினம், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சரை பிரதீப் குமார் ராஜரத்தினம் சந்தித்தார். அப்போது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.2 கோடிக்கான வங்கிக் காசோலையை அவர் வழங்கினார்.

பொதுநலத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதுடன், மாநிலம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்கு பங்களிக்கும் நோக்கில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தொழில் வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் வெற்றி என்பது சமூகத்துக்கு திருப்பிக் கொடுக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டதாக," பிரதீப் குமார் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

சமூகங்கள் மற்றும் பொதுநல முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ரூ.2 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் பயணத்தில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றியுள்ள நிலையில், மாநில மக்களின் நலனுக்காக தனது பங்களிப்பை வழங்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டான் வென்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரதீப் குமார் ராஜரத்தினம் கூறியதாவது,

“வெற்றி என்பது சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது என்று நான் எப்போதும் நம்புகிறேன். தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் வளரக்கூடிய சூழலை தமிழ்நாடு வழங்கியுள்ளது. எனவே, மாநில மக்களின் நலனுக்காக என்னால் இயன்ற பங்களிப்பை வழங்க விரும்பினேன். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்குவதன் மூலம், உதவி மிகவும் தேவைப்படும் சமூகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிக்கும் மாநில அரசின் முயற்சிகளுக்கு பங்களிக்க முடியும் என நம்புகிறேன்,” என்றார்.

ஸ்டான் வென்சர்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் வழக்கமான வணிகச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தின் பொதுநல முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்பாக இந்த நன்கொடை அமைந்துள்ளது. பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம் சமூகத்துடன் நிறுவனத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு பிரதீப் குமார் ராஜரத்தினத்தால் தொடங்கப்பட்ட 'ஸ்டான் வென்சர்ஸ்' நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. அமெரிக்கா, லண்டன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மற்றும் நகரங்களிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஒயிட்-லேபிள் எஸ்இஓ (White-label SEO) மற்றும் லிங்க்-பில்டிங் (Link-building) சேவைகளை வழங்குவதில் ஸ்டான் வென்சர்ஸ் நிறுவனம் சிறப்புப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகள் இந்நிறுவனத்தின் சேவைகளை நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றன.