மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே புத்தெழுச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.28) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 646.49 புள்ளிகள் உயர்ந்து 82,503.97 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 196.7 புள்ளிகள் உயர்ந்து 25,372.10 ஆக இருந்தது.
“இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) தாக்கமாக இந்திய பங்குச் சந்தையில் புதிய எழுச்சி நிலவுகிறது,” என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், எடர்னல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. நெஸ்லே இந்தியா, சன் பார்மா, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசுகி, ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 305.92 புள்ளிகள் உயர்ந்து 82,163.40 ஆகவும், நிஃப்டி 102.00 புள்ளிகள் உயர்ந்து 25,277.40 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தென் கொரியா, ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் ஏற்றமும், ஜப்பானில் சரிவும் நிலவியது. இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கமாக இந்திய பங்குச் சந்தையில் புதிய எழுச்சி நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஐடிசி
டிசிஎஸ்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
எடர்னல்
கோடக் மஹிந்திரா பேங்க்
எம் அண்ட் எம்
ஆக்சிஸ் பேங்க்
அதானி போர்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
என்டிபிசி
டாடா ஸ்டீல்
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
எல் அண்ட் டி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஹெச்டிஎஃப்சி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டைடன் கம்பெனி
நெஸ்லே இந்தியா
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
இன்போசிஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி சுசுகி
ஏசியன் பெயின்ட்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.61 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan