சர்வதேச பொருளாதாரச் சூழல்கள் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுப் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்து 77,334 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 93.3 புள்ளிகள் சரிந்து 24,079.75 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி உடன்பாடு எட்டாத நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 106 டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது,” வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எம் அண்ட் எம், நெஸ்லே இந்தியா, எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. ஏனைய பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 959.67 புள்ளிகள் சரிந்து 76,704.33 ஆகவும், நிஃப்டி 278.50 புள்ளிகள் சரிந்து 23,894.55 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஜப்பான், ஷாங்காய், தென் கொரியா, ஹாங்காங்கில் தடுமாற்றமே நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி உடன்பாடு எட்டாத நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 106 டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
நெஸ்லே இந்தியா
எஸ்பிஐ
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
என்டிபிசி
டாடா மோட்டார்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
அதானி போர்ட்ஸ்
டெக் மஹிந்திரா
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
இன்போசிஸ்
எடர்னல்
ஐசிஐசிஐ பேங்க்
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
ஐடிசி
சன் பார்மா
டிசிஎஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எல் அண்ட் டி
பாரதி ஏர்டெல்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.28 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan