+

ரூ.100 கோடி ஊக்கத்துடன் புதிய 'டீப் டெக்' ஸ்டார்ட்அப் கொள்கையை அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு!

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் முதல் பிரத்யேக 'டீப் டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை' (Deep Tech Startup Policy 2025–26) தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை அன்று வெளியிட்டது. சென்னையில் நடைபெற்ற 'உமாஜின் டிஎன்' (Umagine TN) தொழில்நுட்ப

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் முதல் பிரத்யேக 'டீப் டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை' (Deep Tech Startup Policy 2025–26) தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை அன்று வெளியிட்டது. சென்னையில் நடைபெற்ற 'யுமாஜின் டிஎன்' (Umagine TN) தொழில்நுட்ப மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தக் கொள்கையைத் தொடங்கி வைத்தார்.

ஆய்வகங்களில் உருவாக்கப்படும் உயர் தொழில்நுட்பங்களைக் சந்தைக்குக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

umagine

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ரூ.100 கோடி முதலீடு: அடுத்த 5 ஆண்டுகளில் 100 டீப் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கவும், பொது மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் ரூ.100 கோடியைத் திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • காப்புரிமை மற்றும் பயிற்சி: டீப் டெக் நிறுவனங்களின் வருடாந்திர காப்புரிமை (Patent) பதிவை 25% அதிகரிப்பது மற்றும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு டீப் டெக் திறன்களில் பயிற்சி அளிப்பது இதன் முக்கிய குறிக்கோள்களாகும்.

  • ஐந்து முக்கிய தூண்கள்: இந்தத் திட்டம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), நிதி உதவி, உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் சந்தை விரிவாக்கம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் செயல்படும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மானியங்கள், வணிகமயமாக்கல் ஆதரவு மற்றும் காப்புரிமை பெறுவதற்கான உதவிகளை இந்தக் கொள்கை வழங்குகிறது. மேலும், 'அரசே ஆரம்பக்கட்ட ஏற்பாளர்' (Government as Early Adopter Programme) என்ற திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, முன்னோடித் திட்டங்களை (Pilot projects) அரசே ஏற்று செயல்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டீப் டெக் என்றால் என்ன?

மேம்பட்ட அறிவியல் அல்லது பொறியியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களே 'டீப் டெக்' (Deeptech) என அழைக்கப்படுகின்றன. இவை நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் அதிக முதலீடு தேவைப்படும் துறைகளாகும்.

தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் iTNT Hub (தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்) ஆகியவை இணைந்து இந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

facebook twitter