லடாக்கில் ஒரு முட்டை ரூ.25,000-த்திற்கு ஏலம் - ஈரான் போரில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்!

05:05 PM Apr 08, 2026 | muthu kumar

தற்போது மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது போர் தொடுத்திருக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், லே மற்றும் லடாக் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது. ஈரான் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் ஆதரவும் வழங்கும் வகையிலான நிகழ்வு ஒன்றில் ஒரு முட்டை ரூ.25,000-த்திற்கு ஏலம் போனது.

ஈரானில் நடைபெற்று வரும் மோதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, லடாக் மாநிலத்தின் லே மாவட்டத்தில் ஒரு முட்டை ரூ.25,000க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் ஒற்றுமையின் வலுவான சின்னமாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்வு ஒரு உள்ளூர் நன்கொடை இயக்கத்தின் போது நடைபெற்றது. இதில் மக்கள் பணம், நகைகள், விலைமதிப்புள்ள உலோகங்கள் மட்டுமல்லாமல் அன்றாட பயன்பாட்டு பொருட்களையும் தாராளமாக வழங்கினர்.

ஒரு முட்டை ரூ.25,000-த்திற்கு ஏலத்தில் எடுத்த முடிவை விளக்கிய உள்ளூர் நபர் ஷபீர் ஹுசைன்,

“ஒரு முட்டையின் விலை ரூ.10 என்பது அனைவருக்கும் தெரியும். நான் ரூ.25,000 கொடுத்தது அதற்காக அல்ல. ஈரானில் குழந்தைகள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு செய்தியாக இது அமையும். அவர்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளோம். இந்த சமூகத்திற்காகவே நாம் வாழ்கிறோம். எங்கள் தலைவர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும், ஆனால் அவர் இதுவரை எந்த வித கோரிக்கையையும் விடுக்கவில்லை,” என்றார்.