கடந்த வாரம் முழுவதும் தடுமாறி வந்த இந்திய பங்குச் சந்தையில் இன்று பச்சை விளக்கு ஒளிரத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 200+ புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஆக.11) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 104.84 புள்ளிகள் உயர்ந்து 79,962.63 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 55.85 புள்ளிகள் உயர்ந்து 24,419.15 ஆக இருந்தது.
இந்திய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றம் நிலவி வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, டைடன் கம்பெனி, ஆக்சிஸ் பேங்க், எம் அண்ட் எம் என பல்வேறு நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. பாரதி ஏர்டெல், மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன.
இன்று பிற்பகல் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 228.12 புள்ளிகள் உயர்ந்து 80,085.91 ஆகவும், நிஃப்டி 80.15 புள்ளிகள் உயர்ந்து 24,443.45 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஷாங்காய், சியோல் மற்றும் ஹாங்காங் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்க வரிவிதிப்பு தாக்கம் சற்றே தணிந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்தும் கூடி வருவதால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
அதானி போர்ட்ஸ்
எஸ்பிஐ
டைடன் கம்பெனி
ஆக்சிஸ் பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
என்டிபிசி
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எல் அண்ட் டி
டிசிஎஸ்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
நெஸ்லே இந்தியா
எடர்னல் லிட்
டெக் மஹிந்திரா
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பவர் கிர்ட் கார்ப்பரேஷன்
இண்டஸ்ட்இண்ட் பேங்க்
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஐசிஐசிஐ பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து ரூ.87.55 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan