தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தையில் ஓர் உறுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச வர்த்தகப் போக்குகளே காரணம்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஆக.13) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 327.79 புள்ளிகள் உயர்ந்து 80,563.38 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 112.15 புள்ளிகள் உயர்ந்து 24,599.55 ஆக இருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தையில் ஸ்டெடி ஆன ஏற்றம் நிலவுவது முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா, மாருதி சுசுகி உள்ளிட்ட பல்வேறு நிறுவன பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. அதேவேளையில் இந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், இன்போசிஸ், ஆக்சிஸ் பேங்க், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 189.65 புள்ளிகள் உயர்ந்து 80,425.24 ஆகவும், நிஃப்டி 91.75 புள்ளிகள் உயர்ந்து 24,579.15 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஷாங்காய், சியோல் மற்றும் ஹாங்காங் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. இந்தப் போக்கு இந்திய பங்குச் சந்தைகளிலும் சாதகமாக எதிரொலிக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளின் வரத்தும் சற்றே கூடியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் பணவீக்கம் உள்ளிட்ட தரவுகள் பாசிட்டிவாக இருப்பது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கோடக் மஹிந்திரா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எடர்னல் லிட்
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
டாடா ஸ்டீல்
என்டிபிசி
சன் பார்மா
எல் அண்ட் டி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டாடா மோட்டார்ஸ்
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
டிசிஎஸ்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஆக்சிஸ் பேங்க்
டைடன் கம்பெனி
அதானி போர்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
நெஸ்லே இந்தியா
ஐடிசி
இண்டஸ்இண்ட் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து ரூ.87.69 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan