
இந்திய பங்குச் சந்தையில் நேற்று ஏற்றம் நிலவிய சூழலில், இன்று மீண்டும் தடுமாற்றம் தொற்றிக் கொண்டது. ஏற்றமும் இறக்கமுமாக மாறி மாறி இருப்பது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஆக.12) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 66.28 புள்ளிகள் உயர்ந்து 80,670.36 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 42.85 புள்ளிகள் உயர்ந்து 24,627.90 ஆக இருந்தது.
எனினும், ஏறிய வேகத்தில் இறங்கத் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை வர்த்தம் அதன்பின், நிலையின்றி ஏற்றமும் இறக்கமுமாக தடுமாறி வருகிறது. மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், ஹெச்சில் டெக்னாலஜிஸ், என்டிபிசி, எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் இறக்கம் கண்டுள்ளன.
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் சென்செக்ஸ் 33.45 புள்ளிகள் உயர்ந்து 80,637.53 ஆகவும், நிஃப்டி 15.20 புள்ளிகள் உயர்ந்து 24,600.25 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஷாங்காய், சியோல் மற்றும் ஹாங்காங் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. ஆனால், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றமும் இறக்கமுமாக தடுமாற்றமே நிலவுகிறது. வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவதும் இதற்கு முக்கிய காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
மாருதி சுசுகி
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
டாடா ஸ்டீல்
ஹெச்சில் டெக்னாலஜிஸ்
என்டிபிசி
டைடன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
சன் பார்மா
எல் அண்ட் டி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டிசிஎஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இன்போசிஸ்
டாடா மோட்டார்ஸ்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐடிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
கோடக் மஹிந்திரா
நெஸ்லே இந்தியா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
எடர்னல் லிட்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து ரூ.87.66 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan