வாரத்தின் தொடக்க நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் தடுமாற்றம் தொடர்ந்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 509.77 புள்ளிகள் சரிந்து 72,822.60 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 141.20 புள்ளிகள் சரிந்து 22,571.90 ஆக இருந்தது.
“மேற்கு ஆசிய போர் பதற்றம் நீடிப்பது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தைகளின் வீழ்ச்சிப் போக்கு முதலானவையே இந்திய பங்குச் சந்தை தடுமாற்றத்துடன் தொடர காரணம்,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டைடன் கம்பெனி, ஆக்சிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. பவர் கிரிட் கார்ப்பரேஷன், என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 268.98 புள்ளிகள் சரிந்து 73,050.57 ஆகவும், நிஃப்டி 77.10 புள்ளிகள் சரிந்து 22,636.00 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கில் வீழ்ச்சியே நிலவுகிறது. மேற்கு ஆசிய போர் பதற்றம் நீடிப்பது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தைகளின் வீழ்ச்சிப் போக்கு முதலானவையே இந்திய பங்குச் சந்தை தடுமாற்றத்துடன் தொடரக் காரணம்.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டைடன் கம்பெனி
ஆக்சிஸ் பேங்க்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
எடர்னல்
டாடா ஸ்டீல்
டிசிஎஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதானி போர்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
சன் பார்மா
எஸ்பிஐ
இண்டஸ்இண்ட் பேங்க்
பாரதி ஏர்டெல்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐடிசி
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.93.03 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan