
இந்திய பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்கமுமாக தடுமாற்றம் நிலவுகிறது. வர்த்தகப் போக்கு என்பது மணிக்கு மணி மாறி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.27) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 417.68 புள்ளிகள் சரிந்து 81,120.02 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 111.1 புள்ளிகள் சரிந்து 24,937.55 ஆக இருந்தது.
“இன்று காலை வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கினாலும் பின்னர் மீண்டது. ஆனால், மீண்டும் சரியத் தொடங்கியது. சர்வதேச பங்குச் சந்தைகளின் சாதகமான போக்கு நிலவினாலும், முதலீட்டாளர்கள் நிதானம் காத்து வருகின்றனர்,” என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, டைடன் கம்பெனி, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 227.75 புள்ளிகள் சரிந்து 81,309.95 ஆகவும், நிஃப்டி 38.75 புள்ளிகள் சரிந்து 25,009.90 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் என அனைத்திலும் ஏற்றமே நிலவியது. சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையும் வெகுவாக மீண்டது. ஆனால், முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதால் மீண்டும் சரிந்தது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஆக்சிஸ் பேங்க்
அதானி போர்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
என்டிபிசி
டாடா ஸ்டீல்
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
நெஸ்லே இந்தியா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
எல் அண்ட் டி
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹெச்டிஎஃப்சி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
டைடன் கம்பெனி
டிசிஎஸ்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
எடர்னல்
மாருதி சுசுகி
கோடக் மஹிந்திரா பேங்க்
எம் அண்ட் எம்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.80 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan