இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று 5-வது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.25) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 141.32 புள்ளிகள் சரிந்து 81,574.31 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 22.4 புள்ளிகள் சரிந்து 25,034.50 ஆகவும் இருந்தது.
H1B விசா கட்டண உயர்வு தாக்கம், வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி தொடர்கிறது. இன்றும் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிந்தன. சன் பார்மா, ஆக்சிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகளே ஏற்றம் கண்டன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 243.96 புள்ளிகள் சரிந்து 81,471.67 ஆகவும், நிஃப்டி 74.10 புள்ளிகள் சரிந்து 24,982.80 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோலில் சரிவும், ஷாங்காய், டோக்கியோ மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமும் நிலவுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளின் போக்குடன், எச்1பி விசா கட்டண உயர்வு தாக்கம், வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஐந்தாவது நாளாக வீழ்ச்சி நீடிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
சன் பார்மா
ஆக்சிஸ் பேங்க்
பாரதி ஏர்டெல்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எஸ்பிஐ
டெக் மஹிந்திரா
டாடா ஸ்டீல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அதானி போர்ட்ஸ்
டாடா ஸ்டீல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐசிஐசிஐ பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
இன்போசிஸ்
டைடன் கம்பெனி
டிசிஎஸ்
ஐடிசி
எடர்னல் லிட்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.66 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan