எச்1பி விசா கட்டண உயர்வு தாக்கம், வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி தொடர்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.24) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 380.48 புள்ளிகள் சரிந்து 81,721.62 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 106.45 புள்ளிகள் சரிந்து 25,063.05 ஆகவும் இருந்தது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் தாக்கத்தால் சில நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தாலும் கூட, சர்வதேச காரணிகளால் பல்வேறு நிறுவனப் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி, டெக் மஹிந்திரா, இந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 161.51 புள்ளிகள் சரிந்து 81,940.59 ஆகவும், நிஃப்டி 42.85 புள்ளிகள் சரிந்து 25,126.65 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமும், சியோல் மற்றும் டோக்கியோவில் சரிவும் நிலவுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளின் போக்குடன், எச்1பி விசா கட்டண உயர்வு தாக்கம், வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நீடிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அதானி போர்ட்ஸ்
டாடா ஸ்டீல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
இன்போசிஸ்
டைடன் கம்பெனி
டிசிஎஸ்
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
ஐடிசி
டெக் மஹிந்திரா
இந்துஸ்தான் யுனிலீவர்
எடர்னல் லிட்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.77 ஆக கடும் வீழ்ச்சி கண்டிருந்தது.
Edited by Induja Raghunathan