அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளதால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து எழுச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.12) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 287.93 புள்ளிகள் உயர்ந்து 81,836.66 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 84.25 புள்ளிகள் உயர்ந்து 25,089.75 ஆகவும் இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்கு என்பது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிப்பதால், தொடர்ந்து 3-வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி, பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் சென்செக்ஸ் 382.05 புள்ளிகள் உயர்ந்து 81,930.77 ஆகவும், நிஃப்டி 116.55 புள்ளிகள் உயர்ந்து 25,122.05 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஹாங்காங், சியோல், டோக்கியோ, ஷாங்காய் என அனைத்திலும் ஏற்றமே நிலவுகிறது. இது இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியதும் முக்கியக் காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
எல் அண்ட் டி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டைடன் கம்பெனி
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
ஆக்சிஸ் பேங்க்
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டிசிஎஸ்
ஐசிஐசிஐ பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எம் அண்ட் எம்
நெஸ்லே இந்தியா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஐடிசி
எஸ்பிஐ
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
எடர்னல் லிட்
இந்துஸ்தான் யூனிலீவர்0
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.30 ஆக வீழ்ச்சி கண்டு இருந்தது.
Edited by Induja Raghunathan