
எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக உயர்த்தியதன் தாக்கம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.22) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 475.16 புள்ளிகள் சரிந்து 82,151.07 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 88.95 புள்ளிகள் சரிந்து 25,238.10 ஆகவும் இருந்தது.
எச்1பி விசா கட்டண உயர்வின் எதிரொலியால் இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதேவேளையில், அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளன. அதேபோல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனப் பங்குகள் பலவும் பங்குச் சந்தையை சரிவில் இருந்து மீட்டு வருகின்றன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 249.16 புள்ளிகள் சரிந்து 82,377.06 ஆகவும், நிஃப்டி 54.15 புள்ளிகள் சரிந்து 25,272.90 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியா, சியோல் மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமும், ஹாங்காங்கில் சரிவும் நிலவுகிறது. H1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக உயர்த்தியதன் தாக்கம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கிறது. குறிப்பாக, ஐடி நிறுவனப் பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன. எனினும் செபி அளித்த நற்சான்றின் விளைவாக, அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.

ஏற்றம் காணும் பங்குகள்:
எடர்னல் லிட்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஆக்சிஸ் பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
மாருதி சுசுகி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
கோடக் மஹிந்திரா பேங்க்
நெஸ்லே இந்தியா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
எம் அண்ட் எம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
என்டிபிசி
சன் பார்மா
டைடன் கம்பெனி
டாடா மோட்டார்ஸ்
ஐடிசி
எல் அண்ட் டி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இன்போசிஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.20 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan