
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் புதிய எழுச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.4) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 888.96 புள்ளிகள் உயர்ந்து 81,456.67 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 265.7 புள்ளிகள் உயர்ந்து 24,980.75 ஆக இருந்தது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு, வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களின் தாக்கத்தால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன. எனினும், பல்வேறு நிறுவனப் பங்குகளும் ஏற்ற இறக்கங்களைக் கண்டன.
எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றத்தையும், எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ, ஆக்சிஸ் பேங்க், இன்போசிஸ், மாருதி சுசுகி
உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவையும் சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 337.03 புள்ளிகள் உயர்ந்து 80,904.74 ஆகவும், நிஃப்டி 81.70 புள்ளிகள் உயர்ந்து 24,796.75 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் டோக்கியோவில் ஏற்றமும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் சரிவும் நிலவுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு, வரிவிகித மாற்றங்களின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்தன.
ஏற்றம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா மோட்டார்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
டைடன் கம்பெனி
இந்துஸ்தான் யூனிலீவர்
டிசிஎஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா ஸ்டீல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
அதானி போர்ட்ஸ்
என்டிபிசி
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
பாரதி ஏர்டெல்
எமரால்டு லிட்
டெக் மஹிந்திரா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இன்போசிஸ்
மாருதி சுசுகி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சன் பார்மா
இண்டஸ்இண்ட் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு ரூ.88.14 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan