இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடப்பதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.17) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 262.74 புள்ளிகள் உயர்ந்து 82,643.43 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 85.25 புள்ளிகள் உயர்ந்து 25,324.35 ஆகவும் இருந்தது.
அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக பேச்சுவார்த்தையின் எதிரொலியாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக ஏற்றம் கண்டுள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் எடர்னல் லிட், இந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, இண்டஸ்இண்ட் பேங்க், டாடா ஸ்டீல், டைடன் கம்பெனி, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவை சந்தித்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 320.53 புள்ளிகள் உயர்ந்து 82,701.22 ஆகவும், நிஃப்டி 90.40 புள்ளிகள் உயர்ந்து 25,329.50 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோலில் மட்டும் சரிவு நிலவுகிறது; ஹாங்காங், டோக்கியோ, ஷாங்காயில் ஏற்றம் நிலவுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளில் கலவையான போக்குகள் இருந்தாலும் கூட, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயின்ட்ஸ்
இன்போசிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
டிசிஎஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஐசிஐசிஐ பேங்க்
எல் அண்ட் டி
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
என்டிபிசி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எடர்னல் லிட்
இந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டைடன் கம்பெனி
ஐடிசி
பஜாஜ் ஃபின்சர்வ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.82 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan