
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.18) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 447.5 புள்ளிகள் உயர்ந்து 83,141.21 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 118.7 புள்ளிகள் உயர்ந்து 25,448.95 ஆகவும் இருந்தது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித்தை 25 அடிப்படை புள்ளிகளில் குறைத்துள்ளது. இது, இந்திய பங்குச் சந்தையில் சாதகமான போக்குக்கு வித்திட்டது.
குறிப்பாக, இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவனப் பங்குகளின் மவுசு வெகுவாக கூடியது. இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, எடர்னல் லிட், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன.
இன்று பிற்பகல் 1.20 மணியளவில் சென்செக்ஸ் 134.10 புள்ளிகள் உயர்ந்து 82,827.81 ஆகவும், நிஃப்டி 30.60 புள்ளிகள் உயர்ந்து 25,360.85 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை கலவையான போக்குடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஹாங் காங்கில் மட்டும் சரிவு நிலவுகிறது; சியோ, ஹாங்காங், டோக்கியோவில் ஏற்றம் நிலவுகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் முதல் முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்ததன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் சாதகமாக எதிரொலித்தது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
எடர்னல் லிட்
சன் பார்மா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
மாருதி சுசுகி
அதானி போர்ட்ஸ்
டைடன் கம்பெனி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பாரதி ஏர்டெல்
நெஸ்லே இந்தியா
எஸ்பிஐ
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
என்டிபிசி
எம் அண்ட் எம்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.03 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan