கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தையில் இன்று வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.19) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 264.36 புள்ளிகள் சரிந்து 82,749.60 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 65 புள்ளிகள் சரிந்து 25,358.60 ஆகவும் இருந்தது.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே கடும் சரிவு நிலவுகிறது. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன. அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், எஸ்பிஐ, சன் பார்மா, இண்டஸ்இண்ட் பேங்க்
என்டிபிசி, மாருதி சுசுகி, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 492.00 புள்ளிகள் சரிந்து 82,521.96 ஆகவும், நிஃப்டி 132.05 புள்ளிகள் சரிந்து 25,291.55 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியா மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமும், சியோல் மற்றும் ஹாங்காங்கில் சரிவும் நிலவுகிறது. இந்தக் கலவையான போக்கின் எதிரொலியாகவும், உள்ளூர் முதலீட்டாளர்களிடம் நிலவும் ஒருவித குழப்பமாக சூழலும் இன்றைய இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு காரணம். வெளிநாட்டு முதலீட்டின் வரத்தும் சற்றே குறைந்துள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
எஸ்பிஐ
சன் பார்மா
இண்டஸ்இண்ட் பேங்க்
என்டிபிசி
மாருதி சுசுகி
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
எடர்னல் லிட்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
டைடன் கம்பெனி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பாரதி ஏர்டெல்
நெஸ்லே இந்தியா
என்டிபிசி
எம் அண்ட் எம்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.30 ஆக வீழ்ச்சி கண்டு இருந்தது.
Edited by Induja Raghunathan