சர்வதேச வர்த்தக நிலவரத்தின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் மீட்சிப் போக்கு நிலவுகிறது. சென்செக்ஸ் 300+ புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.16) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 201.69 புள்ளிகள் உயர்ந்து 81,987.43 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 52.8 புள்ளிகள் உயர்ந்து 25,122 ஆகவும் இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு காரணமாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக ஏற்றம் கண்டுள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், நெஸ்லே இந்தியா, டைடன் கம்பெனி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டிருந்தன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 323.94 புள்ளிகள் உயர்ந்து 82,109.68 ஆகவும், நிஃப்டி 92.05 புள்ளிகள் உயர்ந்து 25,161.25 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஹாங்காங், சியோல், டோக்கியோ, ஷாங்காய் என அனைத்திலும் ஏற்றமே நிலவுகிறது. இதுவும் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
டிசிஎஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஐடிசி
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இண்டஸ்இண்ட் பேங்க்
எடர்னல் லிட்
ஐசிஐசிஐ பேங்க்
எல் அண்ட் டி
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
என்டிபிசி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயின்ட்ஸ்
இன்போசிஸ்
நெஸ்லே இந்தியா
டைடன் கம்பெனி
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.11 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan