மேற்கு ஆசிய போர் பதற்றம் தணியத் தொடங்கியிருப்பதால் இந்திய பங்குச் சந்தைகள் வெகுவாக மீண்டதுடன் இன்று நல்ல எழுச்சி நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,899.53 புள்ளிகள் உயர்ந்து 73,847.08 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 572.55 புள்ளிகள் உயர்ந்து 22,903.95 ஆக இருந்தது.
“மேற்கு ஆசிய போர் பதற்றம் தணியத் தொடங்கியிருப்பது, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வர ஆரம்பித்து இருப்பது, சர்வதேச சந்தைகளின் எழுச்சிப் போக்கு முதலானவையே இந்திய பங்குச் சந்தை மீண்டு புதிய எழுச்சி பெற காரணம்,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், என்டிபிசி ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவை சந்தித்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் அனைத்தும் ஏற்றம் கண்டிருந்தன.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 1,689.59 புள்ளிகள் உயர்ந்து 73,637.13 ஆகவும், நிஃப்டி 498.35 புள்ளிகள் உயர்ந்து 22,829.75 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமே நிலவுகிறது. மேற்கு ஆசிய போர் பதற்றம் தணியத் தொடங்கியிருப்பது, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வர ஆரம்பித்து இருப்பது, சர்வதேச சந்தைகளின் எழுச்சிப் போக்கு முதலானவையே இந்திய பங்குச் சந்தை மீண்டு புதிய எழுச்சி பெற காரணம்
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதானி போர்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
சன் பார்மா
எஸ்பிஐ
இண்டஸ்இண்ட் பேங்க்
டைடன் கம்பெனி
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
இன்போசிஸ்
பாரதி ஏர்டெல்
எடர்னல்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஐடிசி
டாடா ஸ்டீல்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
டெக் மஹிந்திரா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.93.32 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan