
சர்வதேச போக்குகளின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டு, பின்னர் சற்றே மீளும் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜூலை 29) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 270.77 புள்ளிகள் சரிந்து 80,620.25 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 71.25 புள்ளிகள் சரிந்து 24,609.65 ஆக இருந்தது.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவது தொடர்ந்து இழுபறியாக உள்ளது, இன்றைய இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்த்ல் எதிரொலிக்கிறது. டிசிஎஸ் ஆட்குறைப்பு நடவடிக்கையால், அந்த நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன. அதேவேளையில், பாரதி ஏர்டெல்,
சன் ஃபார்மா, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 21.81 புள்ளிகள் சரிந்து 80,869.21 ஆகவும், நிஃப்டி 2.40 புள்ளிகள் சரிந்து 24,678.50 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் கலவையான போக்குடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோலில் மட்டும் ஏற்றம் நிலவுகிறது. டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஷாங்காங் என அனைத்திலும் சரிவுப் போக்கு நிலவியது. இதுவும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கிறது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி ஆவதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்து வருகின்றன.
ஏற்றம் காணும் பங்குகள்:
பாரதி ஏர்டெல்
சன் பார்மா
டாடா மோட்டார்ஸ்
எல் அண்ட் டி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா ஸ்டீல்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
ஐசிஐசிஐ பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபின்சர்வ்
எட்டர்னல் லிட்
டைடன் கம்பெனி
மாருதி சுசுகி
டெக் மஹிந்திரா
ஆக்சிஸ் பேங்க்
எஸ்பிஐ
இன்போசிஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
எம் அண்ட் எம்
நெஸ்லே இந்தியா
ஐடிசி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து ரூ.86.84 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan