கடந்த வார இறுதியில் பாசிட்டிவான போக்கு காணப்பட்ட இந்திய பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே சுணக்கம் நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.15) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 93.81 புள்ளிகள் உயர்ந்து 81,998.51 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 24.45 புள்ளிகள் உயர்ந்து 25,138.45 ஆகவும் இருந்தது. அதன்பின், சற்றே சரிவை சந்தித்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு எதிரொலித்தாலும் கூட, இந்திய பங்குச் சந்தைகளில் சுணக்கமே காணப்படுகிறது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்றமும் இறக்கமுமாக மாறி மாறி நிலவுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான வங்கி நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. அதேவேளையில், மாருதி சுசுகி, பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பெனி, டெக் மஹிந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்று பிற்பகல் 1 மணியளவில் சென்செக்ஸ் 24.85 புள்ளிகள் சரிந்து 81,879.85 ஆகவும், நிஃப்டி 18.75 புள்ளிகள் சரிந்து 25,095.25 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை கலவையான போக்குடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஹாங்காங், சியோல், டோக்கியோ, ஷாங்காய் என அனைத்திலும் ஏற்றமே நிலவுகிறது. இதுவும் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கிறது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்துள்ளனர். இதனால், பங்குச் சந்தை வர்த்தகத்தில் சுணக்கமான போக்கு நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
எடர்னல் லிட்
ஐசிஐசிஐ பேங்க்
எல் அண்ட் டி
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
என்டிபிசி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
டைடன் கம்பெனி
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
டிசிஎஸ்
நெஸ்லே இந்தியா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஐடிசி
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.28 ஆக வீழ்ச்சி கண்டு இருந்தது.
Edited by Induja Raghunathan