Stock News: பங்குச் சந்தை தடுமாறினாலும் ஏற்றம் காணும் பங்குகள் எவை?

01:55 PM Sep 23, 2025 | Jai s

H1B விசா கட்டண உயர்வு, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றமும் இறக்கமுமாக தடுமாற்றம் நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.23) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 147.53 புள்ளிகள் உயர்ந்து 82,307.50 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 48.5 புள்ளிகள் உயர்ந்து 25,250.85 ஆகவும் இருந்தது.

இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும்போது ஏற்றம் கண்டபோதும், அடுத்த சில நிமிடங்களிலேயே தடுமாற்றம் நிலவியது. எனினும், இண்டஸ்இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி, ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ, எம் அண்ட் எம், என்டிபிசி,

டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 21.14 புள்ளிகள் உயர்ந்து 82,181.11 ஆகவும், நிஃப்டி 7.95 புள்ளிகள் உயர்ந்து 25,210.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் சரிவும், சியோலில் ஏற்றமும் நிலவுகிறது. எச்1பி விசா கட்டண உயர்வு, வெளிநாட்டு முதலீடு வரத்து குறைவு முதலான காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நீடிக்கிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:

இண்டஸ்இண்ட் பேங்க்

பஜாஜ் ஃபைனான்ஸ்

மாருதி சுசுகி

ஆக்சிஸ் பேங்க்

எஸ்பிஐ

எம் அண்ட் எம்

என்டிபிசி

டாடா ஸ்டீல்

டாடா மோட்டார்ஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

பஜாஜ் ஃபின்சர்வ்

இன்போசிஸ்

எல் அண்ட் டி

அதானி போர்ட்ஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஐசிஐசிஐ பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

டைடன் கம்பெனி

டிசிஎஸ்

சன் பார்மா

பாரதி ஏர்டெல்

ஐடிசி

ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

டெக் மஹிந்திரா

இந்துஸ்தான் யுனிலீவர்

எடர்னல் லிட்

நெஸ்லே இந்தியா

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.66 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan