+

5 கிலோ LPG விநியோகத்தை அதிகரித்து, PNG இணைப்புகளை வேகப்படுத்தும் மத்திய அரசு!

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை சமாளிக்க இந்தியா, 5 கிலோ எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விநியோகத்தை அதிகரித்ததுடன், குழாய் இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளின் வழங்கலை வேகப்படுத்தியுள்ளது. மார்ச் 23 முதல் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்ட

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை சமாளிக்க இந்தியா, 5 கிலோ எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விநியோகத்தை அதிகரித்ததுடன், குழாய் இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளின் வழங்கலை வேகப்படுத்தியுள்ளது.

மார்ச் 23 முதல் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்ட 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தினசரி விற்பனை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இடம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு எளிதில் கிடைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன், மார்ச் மாதத்திலிருந்து 4.24 லட்சம் புதிய PNG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 30,000க்கும் மேற்பட்ட பயனர்கள் எல்பிஜி இணைப்புகளை ஒப்படைத்து, PNG-க்கு மாறியுள்ளனர்.

LPG Cylinder

மேற்கு ஆசியாவில் கடந்த ஆறு வாரங்களாக நீடித்து வரும் போர் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது மூல எண்ணெயின் பாதி அளவையும், இயற்கை எரிவாயுவின் 40 சதவீதத்தையும், எல்பிஜியின் 85-90 சதவீதத்தையும் அந்தப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. மாற்று நாடுகளிலிருந்து மூல எண்ணெய் கிடைத்தாலும், எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க அரசு, வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி விநியோகத்துக்கு முன்னுரிமை வழங்கி, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக பயன்பாட்டிற்கான விநியோகத்தை குறைத்துள்ளது. அதே நேரத்தில், மானிய எல்பிஜி இணைப்பு இல்லாதவர்களுக்கு சந்தை விலையிலான 5 கிலோ சிலிண்டர்கள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி மாதத்தில் தினசரி சுமார் 77,000 சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களில் அது 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஏப்ரல் 11 அன்று மட்டும் 52 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும், எங்கும் பற்றாக்குறை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்த தேவையில் 98 சதவீதம் ஆன்லைன் முன்பதிவுகள் மூலம் வருகிறது. விநியோக கண்காணிப்பு மற்றும் அங்கீகார முறைமைகள் 93 சதவீத பரிவர்த்தனைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தவறான மாற்றுச் சப்ளை தடுக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

வணிக எல்பிஜி விநியோகம் தற்போது நெருக்கடிக்கு முன் இருந்த அளவில் சுமார் 70 சதவீதம் வரை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. Indian Oil Corporation, Bharat Petroleum Corporation Limited, Hindustan Petroleum Corporation Limited ஆகிய அரசு நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து விநியோகத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றன.

PNG

அதே நேரத்தில், வீட்டு PNG மற்றும் சிஎன்ஜி போக்குவரத்திற்கான இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு முழு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உர உற்பத்தி ஆலைகளுக்கும் சுமார் 95 சதவீத தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் எல்.என்.ஜி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Indraprastha Gas Ltd, Mahanagar Gas Ltd, GAIL Gas Ltd போன்ற நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு, வணிக பயனர்களுக்கு PNG இணைப்புகளை முன்னுரிமையுடன் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் இயங்குகின்றன. போதுமான கச்சா எண்ணெய் இருப்புகள் உள்ளன என்றும், உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.10 வரை உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய டீசல் மற்றும் விமான எரிபொருளின் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி: பிடிஐ

facebook twitter