அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற புதிய நம்பிக்கையின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவுகிறது. சென்செக்ஸ் 379.29 புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.8) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 296.26 புள்ளிகள் உயர்ந்து 81,007.02 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 90.35 புள்ளிகள் உயர்ந்து 24,831.35 ஆகவும் இருந்தது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு என்பது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.
ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றமும், பாரதி ஏர்டெல், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவும் கண்டிருந்தன.
இன்று பிற்பகல் 1 மணியளவில் சென்செக்ஸ் 379.29 புள்ளிகள் உயர்ந்து 81,090.05 ஆகவும், நிஃப்டி 123.05 புள்ளிகள் உயர்ந்து 24,864.05 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் ஏற்றம் நிலவுகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை வலுத்திருப்பதால், சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு என்பது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா மோட்டார்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எல் அண்ட் டி
அதானி போர்ட்ஸ்
எஸ்பிஐ
கோடக் மஹிந்திரா பேங்க்
எம் அண்ட் எம்
எடர்னல் லிட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி சுசுகி
சன் பார்மா
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பாரதி ஏர்டெல்
இந்துஸ்தான் யூனிலீவர்
டைடன் கம்பெனி
என்டிபிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இன்போசிஸ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
இண்டணஸ்இண்ட் பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.01 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan