
இந்திய பங்குச் சந்தையில் இன்று காலை தொடங்கி ஏற்றம் நிலவுகிறது. குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகளுக்கு மவுசு வெகுவாக கூடியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.9) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 366.87 புள்ளிகள் உயர்ந்து 81,154.17 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 101.35 புள்ளிகள் உயர்ந்து 24,874.50 ஆகவும் இருந்தது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இது மேலும் சில தினங்கள் நீடிக்கக் கூடும். இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன.
அதேவேளையில், பாரதி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன், சன் பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 207.31 புள்ளிகள் உயர்ந்து 80,994.61 ஆகவும், நிஃப்டி 62.30 புள்ளிகள் உயர்ந்து 24,835.45 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமும் இறக்கமுமாக கலவையான போக்கு நிலவுகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை வலுத்திருப்பதால், சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கு என்பது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
டெக் மஹிந்திரா
அதானி போர்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
டிசிஎஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
எல் அண்ட் டி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐடிசி
நெஸ்லே இந்தியா
இந்துஸ்தான் யுனிலீவர்
மாருதி சுசுகி
கோடக் மஹிந்திரா பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பாரதி ஏர்டெல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
சன் பார்மா
பஜாஜ் ஃபைனான்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
டாடா ஸ்டீல்
டாடா மோட்டார்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
எம் அண்ட் எம்
எமரால்டு லிட்
டைடன் கம்பெனி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.04 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan