
இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் ஏற்றமும் இறக்கமுமாக தடுமாற்றம் நிலவுகிறது. இந்தப் போக்கு நீடிக்கக் கூடும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. இன்று இன்று (செப்.4) காலை வர்த்தகம் தொடங்கும்போது ஏற்றம் இருந்தாலும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
ஜிஎஸ்டி வரிவிகித மாற்றமானது, பங்குச் சந்தையில் பாசிட்டிவான போக்குக்கு வித்திடவில்லை என்பதையே சென்செக்ஸ், நிஃப்டி புள்ளி நிலவரங்கள் காட்டுகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
எம் அண்ட் எம், எடர்னல் லிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றமும், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகள் இறக்கமும் கண்டுள்ளன.
இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்செக்ஸ் 41.12 புள்ளிகள் உயர்ந்து 80,759.13 ஆகவும், நிஃப்டி 21.50 புள்ளிகள் உயர்ந்து 24,755.80 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் டோக்கியோவில் ஏற்றமும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் சரிவும் நிலவுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு, வரிவிகித மாற்றங்கள் நேற்றைய வர்த்தக தொடக்கத்தில் பாசிட்டிவ் தாக்கம் தந்தாலும், அதன்பின் கடும் வீழ்ச்சியே ஏற்பட்டது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தடுமாற்றமே நீடிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
எடர்னல் லிட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி சுசுகி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பாரதி ஏர்டெல்
சன் பார்மா
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
ஆக்சிஸ் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா மோட்டார்ஸ்
டைடன் கம்பெனி
இந்துஸ்தான் யூனிலீவர்
டிசிஎஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எல் அண்ட் டி
அதானி போர்ட்ஸ்
என்டிபிசி
எஸ்பிஐ
கோடக் மஹிந்திரா பேங்க்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு ரூ.88.33 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan