
இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இரண்டாவது நாளாக ஏற்றம் நிலவுகிறது. சென்செக்ஸ் 200+ புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.2) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 207.45 புள்ளிகள் உயர்ந்து 80,571.94 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 60.8 புள்ளிகள் உயர்ந்து 24,685.85 ஆக இருந்தது.
இந்திய பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளின் தாக்கத்தால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தையில் பச்சை விளக்கு ஒளிர்கிறது. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. எனினும், டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் எம் அண்ட் எம் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 213.60 புள்ளிகள் உயர்ந்து 80,578.09 ஆகவும், நிஃப்டி 74.90 புள்ளிகள் உயர்ந்து 24,699.95 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் விடுமுறை. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் டோக்கியோவில் ஏற்றமும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் சரிவும் நிலவுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி குறியீடுகளின் பாசிட்டிவ் தாக்கத்தால் உள்ளூர் முதலீட்டாளர்களின் உந்துதலுடன் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. வழிவகுத்துள்ளது..
ஏற்றம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டைடன் கம்பெனி
இந்துஸ்தான் யூனிலீவர்
எல் அண்ட் டி
ஐடிசி
சன் பார்மா
டெக் மஹிந்திரா
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
என்டிபிசி
இன்போசிஸ்
எடர்னல் லிட்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டாடா ஸ்டீல்
அதானி போர்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எஸ்பிஐ
டிசிஎஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
பாரதி ஏர்டெல்
ஆக்சிஸ் பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
எம் அண்ட் எம்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.01 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan