
கடந்த இரு தினங்களாகவே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சில நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏறுமுகம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.2) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 380.02 புள்ளிகள் சரிந்து 85,261.88 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 98.3 புள்ளிகள் சரிந்து 26,077.45 என்ற புதிய உச்சம் தொட்டது.
சர்வதேச பங்குச் சந்தைகளின் கலவையான போக்கு, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. ஏனைய பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 457.64 புள்ளிகள் சரிந்து 85,184.26 ஆகவும், நிஃப்டி 135.70 புள்ளிகள் சரிந்து 26,040.05 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தற்போது தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமும், ஷாங்காயில் சரிவும் நிலவுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளின் கலவையான போக்கு, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுவதாக வர்த்தக நிபுணர்கள் கூறினர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
என்டிபிசி
மாருதி சுசுகி
பாரதி ஏர்டெல்
இண்டஸ்இண்ட் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
டைடன் கம்பெனி
இன்போசிஸ்
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
டிசிஎஸ்
எல் அண்ட் டி
பஜாஜ் ஃபின்சர்வ்
நெஸ்லே இந்தியா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா மோட்டார்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எடர்னல் லிட்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எம் அண்ட் எம்
டெக் மஹிந்திரா
ஆக்சிஸ் பேங்க்
ஐடிசி
சன் பார்மா
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.85 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan