இன்றைய நவீன உலகில், கவனச் சிதறல்கள் என்பது அவ்வப்போது ஏற்படும் இடையூறுகள் மட்டுமல்ல; அவை நம் நாளின் கிட்டத்தட்ட ஒவ்வொரு தருணத்தையும் ஆக்கிரமிக்கும் ஒரு நிலையான, இடைவிடாத சக்தியாக மாறிவிட்டன.
ஸ்மார்ட்போன்களின் முடிவில்லா அலறலாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களின் கவர்ச்சியாக இருந்தாலும் சரி, வேலையில் மல்டி டாஸ்கிங் பற்றிய எதிர்பார்ப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது அமைதியற்ற மனதின் உள் உரையாடலாக இருந்தாலும் சரி, கவனத்தை பராமரிப்பது பலருக்கு ஒரு பெரும் சவாலான ஒன்று. இதன் விளைவு?
நாம் பெரும்பாலும் கவனம் சிதறடிக்கப்பட்டவர்களாகவும், அதிகமாக வேலை செய்து, பணிகளை திறமையாக முடிக்க முடியாமல் தவிப்பவர்களாகவும் இருக்கிறோம். இந்த நீடித்த கவனமின்மை உற்பத்தித் திறனை மட்டும் பாதிப்பதில்லை; இது நமது சாதனை உணர்வை அரித்து, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் மனரீதியாக நம்மை சோர்வடையச் செய்கிறது.
நம்மில் பெரும்பாலோருக்கு மல்டி - டாஸ்கிங் என்பது ஒரு மதிப்புமிக்க திறமை என்று மூளையில் பதியவைக்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வது. இருப்பினும், பெருகிவரும் அறிவியல் சான்றுகள் வேறு ஒரு கதையைச் சொல்கின்றன. அது,
மல்டி - டாஸ்கிங் என்பது நம் கவனத்தைப் சிதறடித்து, மூளை ஆற்றலை குறைக்கிறது. நமது செயல்திறனைக் குறைக்கிறது. இதில் இருக்கும் முரண்பாடான உண்மை என்னவென்றால், ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய முயற்சிப்பது, நம் வேகத்தை குறைத்து நமது கவனத்தை பல துண்டுகளாக சிதறடிக்கிறது.
இதற்கான தீர்வு சிக்கலானதாகவோ, நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒன்றாகவோ இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? உங்கள் கவனத்தை இரட்டிப்பாக்குவதற்கான திறவுகோல் ஓர் எளிய பழக்கத்தில் இருந்தால் என்ன ஆகும்? இதற்கு ஆடம்பரமான கருவிகள் தேவையில்லை, சிறப்பு பயிற்சி வேண்டாம். கடுமையான வாழ்க்கை முறை மாற்றமும் தேவையில்லை.
படம்: மெட்டா ஏஐ
சிங்கிள் டாஸ்கிங் என்றால் என்ன?
கவனத்தை இரட்டிப்பாக்கும் அந்தப் பழக்கம் என்னவென்றால், கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல், ஒரு நேரத்தில் ஒரு பணியில் மட்டும் உங்கள் முழு கவனத்தையும் அர்ப்பணிப்பது. மல்டி - டாஸ்கிங் என்பது பெரும்பாலும் ஒரு பயனுள்ள உற்பத்தித் திறன் என்று பாராட்டப்பட்டாலும், அது செயல்திறனைக் குறைத்து அறிவாற்றல் சுமையை அதிகரிக்கிறது என்றும், இதனால் நீங்கள் கவனம் செலுத்துவதைக் குறைத்து பிழைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
சிங்கிள் டாஸ்கிங் என்ன செய்கிறது?
ஒவ்வொரு முறையும் நீங்கள் பணிகளை மாற்றும்போது, உங்கள் மூளை கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது; நேரத்தையும் சக்தியையும் மறுசீரமைப்பதில் வீணாக்குகிறது. ஆனால், ஒற்றைப் பணி இந்த விஷயங்களை நீக்குகிறது.
ஒரு பணியில் கவனம் செலுத்துவது ஆழ்ந்த ஈடுபாடு, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தி சிக்கல்களை தீர்க்கவும் அனுமதிக்கிறது.
ஒரு பணியில் முழுமையாக கவனம் செலுத்துவது நீங்கள் தகவல்களை எவ்வளவு சிறப்பாக செயலாக்குகிறீர்கள் மற்றும் நினைவில் கொள்கிறீர்கள் என்பதை மேம்படுத்துகிறது.
பல பணிகளைச் செய்வது மன அழுத்த ஹார்மோன்களை எழுப்புகிறது. அதேநேரத்தில் கவனத்துடன் செய்யும் பணி மனதை அமைதிப்படுத்துகிறது.
எப்படி செய்வது?
உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்: அன்றைய நாளுக்கான மிக முக்கியமான பணியைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டிய பட்டியலை (to-do list) உருவாக்கவும்.
நேர மேலாண்மையை பின்பற்றுங்கள்: 25 நிமிடங்கள் கவனம் செலுத்தி வேலை செய்யுங்கள், பின்னர் 5 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.
கவனச் சிதறல்களை தவிர்க்கவும்: போனில் தேவையற்ற நோட்டிஃபிகேஷன்களை அணைக்கவும். கவனச் சிதறல் இல்லாத சூழலை உருவாக்கவும்.
படம்: மெட்டா ஏஐ
தொந்தரவுகளை தவிர்க்கவும்: கவனம் செலுத்தும் நேரத்தைக் குறிக்கும் பொருட்டு ‘Do Not Disturb’ அட்டை அல்லது ஹெட்ஃபோன்களை பயன்படுத்தவும்.
நினைவாற்றலைப் பயிற்சி செய்யுங்கள்: அலைந்து திரியும் கவனத்தை மெதுவாக மீண்டும் கொண்டு வர உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கவும்.
ஒற்றைப் பணிகளில் கவனம் செலுத்துபவர்கள் அதிகரித்த உற்பத்தித் திறன், அதிக வேலை திருப்தி மற்றும் சிறந்த மன நலனைக் கொண்டுள்ளனர். கவனத்தில் ஏற்படும் சிறிய முன்னேற்றங்கள் கூட பணிகளை விரைவாக முடிக்கவும், ஓய்வு அல்லது படைப்பாற்றலுக்கான நேரத்தை ஒதுக்கவும் வழிவகுக்கும்.
தொடர்ந்து நமது கவனத்தை அதிகமாக சிதறடிக்கும் இன்றைய உலகில், கவனத்தை மீட்டெடுப்பது என்பது சவாலாக தோன்றலாம். ஒற்றை வேலை செய்யும் பழக்கம் என்பது உங்கள் கவனத்தை இரட்டிப்பாக்கவும், நீங்கள் வேலை செய்யும் விதத்தை மாற்றவும் எளிய, அறிவியல் பூர்வமாக செய்யக்கூடிய வழியாகும்.
சிறியதாகத் தொடங்குங்கள், சீராக இருங்கள், உங்கள் உற்பத்தித் திறன் மற்றும் மன அமைதியை மேம்படுத்துங்கள்.
மூலம்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan