+

‘இந்தியாவில் Microsoft ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு’ - பிரதமர் மோடியை சந்தித்த சத்ய நாதெல்லா!

மைக்ரோசாஃப்ட், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி முயற்சிகளை வலுப்படுத்த மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான முதலீடாக 17.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 1.5 லட்சம்

Microsoft; இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி முயற்சிகளை வலுப்படுத்த மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான முதலீடாக 17.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 1.5 லட்சம் கோடி) இந்தியாவில் முதலீடு செய்வதாக அறிவித்தார்.

இது குறித்து நாதெல்லா X-இல் பதிவிட்ட செய்தியில்,

“இந்தியாவின் AI வாய்ப்புகளைப் பற்றி பிரதமருடன் உத்வேகமான உரையாடல் நடந்தது. நாட்டின் AI-முதன்மை எதிர்கால இலக்குகளை நிறைவேற்ற, தேவையான உட்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் தலையாயத் திறன்களுக்கு மைக்ரோசாஃப்ட் 17.5 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது,” என்று தெரிவித்தார்.

Thank you, PM @narendramodi ji, for an inspiring conversation on India’s AI opportunity. To support the country’s ambitions, Microsoft is committing US$17.5B—our largest investment ever in Asia—to help build the infrastructure, skills, and sovereign capabilities needed for… pic.twitter.com/NdFEpWzoyZ

— Satya Nadella (@satyanadella) December 9, 2025 ">


இதற்கு பதிலளித்து பதிவிட்ட பிரதமர் மோடி,

“AI குறித்து உலகம் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது! மைக்ரோசாஃப்ட் தனது ஆசியாவின் மிகப்பெரிய முதலீட்டை இந்தியாவில் செய்ய இருப்பது மகிழ்ச்சி. இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுமைகளை உருவாக்குவார்கள்,” என்றார்.
Nadella-Modi

மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த புதிய முதலீடு, முந்தைய 3 பில்லியன் டாலர் முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூருவில் கிளவுட் மற்றும் AI உள்கட்டமைப்பை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

”இந்த முதலீடு மூலம் இந்தியாவில், ’மிகப்பெரிய ஹைபர்ஸ்கேல் இருப்பை’ நிறுவுவது மைக்ரோசாஃப்டின் குறிக்கோள். மேலும், இந்தியா தனது AI பயணத்தின் மிகச் சிறந்த கட்டத்தில் உள்ளது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றத்திற்கு தொழில்நுட்பம் ஊக்கமாக இருக்கும் காலத்தில், இந்தியா முன்னணி AI நாடாக உருவெடுக்கிறது,” என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவை எதிர்கால உலக AI மையங்களில் ஒன்றாக உருவாக்க பல உலக நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை அறிவித்து வருகின்றன.

  • கூகுள் — ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து அதன் மிகப்பெரிய AI மையத்தை அமைக்க $15 பில்லியன் முதலீடு.

  • அமேசான் — இந்தியாவில் பல பில்லியன் டாலர் மதிப்பில் டேட்டா சென்டர் திட்டங்களில் பணியிடுகிறது.

  • குவால்காம் — AI மற்றும் புதுமை குறித்து கடந்த அக்டோபரில் பிரதமருடன் ஆலோசனைகள்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், பிரதமர் மோடி, ’நெறிமுறை சார்ந்த, மனித மையப்படுத்தப்பட்ட AI’ குறித்து உலகளாவிய கொள்கை அமைக்க இந்தியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும், என வலியுறுத்தியிருந்தார்.

இந்தியாவை உலக AI சக்தியாக மாற்றும் நோக்கில், தொழில்நுட்ப மாமத்துக்கள் தொடர்ந்து இந்தியாவை நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More News :
facebook twitter